செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

திருக்குறள் - அறத்துப்பால்

திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம் 1
குறள் 2
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றா டொழாஅ ரெனின்.
எல்லா நூல்களையுங் கற்ற அக்கல்வியறிவினானாய பயன் யாது, தூய அறிவையுடையவன் நல்ல பாதங்களைத் தொழாதொழிவாராயின்.

எவ்வளவு நூலறிவு இருந்தாலும் அனைத்திற்கும் மேலான, தூய அறிவின் அடையாளமாகிய இறைவனை உணர்ந்து அவன் தாள் பணியவில்லையெனில் நூலறிவினால் யாதொரு பயனுமில்லை. இறையுணர்வு இல்லாத நூலறிவு அகங்காரத்தினைப் பெருக்கும், நான் என்ற அகந்தையில் அழிவின் பாதைக்கே பயன்படும், ஆக்கத்திற்கு ஒரு நாளும் உதவாது. நூலறிவு என்பது வெறும் தகவல் தொகுப்பேயன்றி அறிவல்ல. இறையுணர்வு பெற்று அவன் தாள் பணிந்து பணிவினைப் பெறும் போது அறிவின் தொடக்கம் உருவாகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக