புதன், 9 மார்ச், 2016

அரச மரத்தடியில்
அசைவற்றிருக்கும்
ஒரு பிம்பம் !
அதன்முன் ஏதுமின்றி
இருகைகூப்பி
நெஞ்சில் சேர்த்து
கண்மூடி மனமொருங்கி
நின்ற நேரத்தில்
பேராற்றல் உள்ளிருப்பதும்
பேரண்டத்தின்
ஓர்பகுதி யிதென்றும்
உணர்த்திவிட்ட அது
பிம்பமா? பேரண்ட மூலமா?

கண் திறந்தவேளை
மின்னிற்று மூளை
முன்தெரியுமனைத்திலும்
என்னையுணர
எல்லையற்ற ஆற்றல்

உள்ளுள்ளே ஊற்றெடுக்க
எனக்கே நான் பிரமாண்டமாய் !

நம்பிக்கை கூட்டிவைத்த
தும்பிக்கையான் பிம்பம்
படைத்திட்ட பிரமன்
முகம்தெரியா பாட்டன்
அதனினும் பிரமாண்டமாய்!