வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

திருக்குறள் - அறத்துப்பால்- அதிகாரம் 1-குறள் 4

அதிகாரம் - 1
குறள் - 4

வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டூ மிடும்பை யில.

விருப்பு, வெறுப்பு இல்லாதவன் பாதங்களைச் சேர்ந்தார்க்கு எக்காலத்தும்
பிறவித் துன்பமில்லை.

நான் உணர்ந்தது:-

இவ்வுலகில் பொருட்களிலோ, அதனை ஒட்டிய நிகழ்வுகளிலோ எவ்விதமான விருப்பும், வெறுப்பும் இல்லாதிருந்தால் அவர்களை இந்நிலவுலகில் ஒருவரை வருத்தும் எந்தவொரு துன்பமும் அணுகாது. மேலும் இந்நிலையில் வாழ்கையில் ஆன்மா பாவத்தினையோ, புண்ணியத்தினையோ தன்னில் சேர்க்காமல் சூன்ய நிலையில் இருக்கும். சூனய நிலையை ஆன்மா அடைந்ததனால் மறுபிறவி என்ற நிலையிலிருந்து விடுபடுகிறது. எனவே இப்பிறவியுலும் துன்பமில்லை, மறுபிறவி என்ற துன்பமுமில்லை. இதனை எப்படி அடைவது, இந்த தன்மையிலேயே உள்ள இறைவனின் திருவடியினை நீங்காதிருப்பதே என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக