என் கற்பனைக் காதலி என்னோடு பேசாமலிருந்தபொழுது.,
நீ விழையும் மௌனம்உன் சந்தோஷ ஜன்னலின் சாவியென்றால்என் இதய வலி மறைத்துசம்மதமென்றே உரைத்திடுவேன்சாதிக்கப் போவதென்னசத்தியமாய் விளங்கவில்லை எனக்குஆத்மார்த்தமாய் வந்திட்ட உறவில்வாய்வார்த்தை தேவையில்லைதான்அங்கொன்றும் இங்கொன்றுமாய்ஊடல் பேச்சில்லையெனில்உறவின் விழைவும் விளங்காதல்லவா?ஆறுமிங்கே ஆழியில் சங்கமிக்கையில்ஆனந்த இரைச்சலிடுவதை அறிந்தவள்தானே நீ !புள்ளினமும் மெல்லினமாய்சத்தமிட்டு சாடுவதைக் கண்டவள்தானே !சப்தங்கள் இங்கே நம் வாழக்கைச் சாரமாயிற்றுசங்கீதமாய் நம்மோடு இழைந்து போய்விட்டதுஉன்னிலும் என்னிலும் மௌனத்திலும்சபதங்கள் ஜீவித்துக் கொண்டுதானிருக்கின்றனஇதில் நீ மௌனம் என்று எதைத் தேடுகிறாய்?என்றும் நீ சந்தோஷ சங்கீதமாய் வளைய வரஉன்னிடம் யாசிக்கின்றேன்நீ ஏன் இன்னும் யோசிக்கின்றாய் ?- யாசகன்
இன்று இதனைப் பதியும்போது என்னை நான் திரும்பிப் பார்க்கும் ஒரு வாய்ப்பு. சப்தங்களை சங்கீதம் என்ற மனது இன்று சப்தங்களை வெறுப்பதேன். மாற்றங்கள் இவ்வளவு பெரிதாயிருக்குமா? இந்த மாற்றம் இயல்பானதாய் இருக்க வேண்டும். இந்த மாற்றமில்லாமல் ஒன்றிலேயே தொங்கிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனமாய் போய்விடுமோ? சொல்ல இயலாது இன்னும் சில நாள்களில் சலசலக்கும் சண்டை சச்சரவுகளை என் மனது விரும்ப ஆரம்பித்து விடலாம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது இப்படியும் கூடத்தானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக