கல்லூரிப்படிப்பு முடித்து வேலை
பார்த்துக் கொண்டிருந்த நாட்களிலே என் கற்பனையில் உதித்த என் காதலிக்கு நான்
எழுதிய கவிதை. இதைப் பின்னாளில் என் இல்லாளுக்கே கொடுத்துவிட்டேன். இதில் வரும் ”முள்ளான நின் வார்த்தைக்குப் பின்னே” என்ற வரி மட்டும் என் இல்லாளுக்குப் பொருந்தாது.
நின்னை சந்தித்த வேளையில்நான் நினைக்கவில்லைபூதாகாராமாய் நம்முள்இந்த உறவு மலருமென்று !முள்ளான உன் வார்த்தைக்குப் பின்னேரோஜாவான நின் மனதைமெல்லமாய் புரியவைத்துஉறவை மலரவைத்தாய்கொஞ்சகொஞ்சமாய்என் மன சாம்ராஜ்யத்தைஉன் புன்னகையால் சிதைத்தாய்நின் நட்பிற்கு வித்தாய்என் நெஞ்சினுள்ளேயன்பை வார்த்தாய்!என்ன நினைத்து இங்கு வந்தாய்என்னுள் இன்பம் விளைத்தாய்என்னை பண்பினனாய் வடித்தாய்ரசிக்கவும் ரசிக்கப்படவும்என்னை மாற்றியமைத்தாய்இன்று பாடலாய் பாவமாய்என்னுள் நிறைந்தாய்காலமகள் வடித்தளித்த காவியமாய்கண்ணிற்கினியதோர் ஓவியமாய்கண்ணன் எனக்களித்த பரிசானாய்என்றும் என் ஜீவனானாய்இனியதோர் நினைவானாய்யாதுமாய் நின்றாய் என்னவளே,என்றும் நீ எனக்கே எனக்காய் வேண்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக