திங்கள், 29 ஜூலை, 2013

என்னவளே !

கல்லூரிப்படிப்பு முடித்து வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களிலே என் கற்பனையில் உதித்த என் காதலிக்கு நான் எழுதிய கவிதை. இதைப் பின்னாளில் என் இல்லாளுக்கே கொடுத்துவிட்டேன். இதில் வரும் முள்ளான நின் வார்த்தைக்குப் பின்னேஎன்ற வரி மட்டும் என் இல்லாளுக்குப் பொருந்தாது.

நின்னை சந்தித்த வேளையில்
நான் நினைக்கவில்லை
பூதாகாராமாய் நம்முள்
இந்த உறவு மலருமென்று !
முள்ளான உன் வார்த்தைக்குப் பின்னே
ரோஜாவான நின் மனதை
மெல்லமாய் புரியவைத்து
உறவை மலரவைத்தாய்
கொஞ்சகொஞ்சமாய்
என் மன சாம்ராஜ்யத்தை
உன் புன்னகையால் சிதைத்தாய்
நின் நட்பிற்கு வித்தாய்
என் நெஞ்சினுள்ளேயன்பை வார்த்தாய்!
என்ன நினைத்து இங்கு வந்தாய்
என்னுள் இன்பம் விளைத்தாய்
என்னை பண்பினனாய் வடித்தாய்
ரசிக்கவும் ரசிக்கப்படவும்
என்னை மாற்றியமைத்தாய்
இன்று பாடலாய் பாவமாய்
என்னுள் நிறைந்தாய்
காலமகள் வடித்தளித்த காவியமாய்
கண்ணிற்கினியதோர் ஓவியமாய்
கண்ணன் எனக்களித்த பரிசானாய்
என்றும் என் ஜீவனானாய்
இனியதோர் நினைவானாய்
யாதுமாய் நின்றாய் என்னவளே,
என்றும் நீ எனக்கே எனக்காய் வேண்டும் !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக